துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மோட்டர் சைக்கிள் பந்தயம்
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பந்தயத்தை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட விதவிதமான மோட்டார் சைக்கிள்கள் வீரர்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
16 வகையான பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த மோட்டார் சைக்கிளைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.
இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன்,சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments