Breaking News

அங்கலக்குறிச்சி நந்தகோபால்சாமி மலையில் கிருஷ்ணர் வேடமிட்டு பக்தர்கள் வழிபாடு



கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு  அங்கலக்குறிச்சி நந்தகோபால்சாமி மலையில் கிருஷ்ணர் வேடமிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அருகே மலை உச்சியில் அமைந்துள்ளது நந்த கோபால்சாமி மலை. கோவிலுக்கு செல்ல  கரடு முரடான பாதைகள் வழியாக மலையேறி வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நந்த கோபால்சாமி மலையில் குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
 மதியம் 2 மணி அளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று நந்தகோபால்சாமி பாமா ருக்மணி தாயாரை வழிபாடு செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், பொள்ளாச்சி பெருமாள் கோயில், ஆனைமலை பெருமாள் சாமி கரடு, அர்த்தநாரி பாளையம் கோபால்சாமி மலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


 

No comments