Breaking News

மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அறிவுரை


மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்

கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அறிவுரை


பொள்ளாச்சி அடுத்துள்ள பூசாரிபட்டியில் பொள்ளாச்சி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அரங்கில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு  நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.
தாளாளர் மகேந்திரன்  வாழ்த்துரை வழங்கினார்.

 சிறப்பு அழைப்பாளராக கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் பங்கேற்று பேசியது....

மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

நம் வாழ்வில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என்று ஓடக்கூடாது .இங்கு வெற்றி என்பது ஒரு பெரிய விஷயமே கிடையாது.
வாழ்க்கையை அழகாய் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

ஒரு முறை வெற்றி பெற்றால் கடைசிவரை அந்த வெற்றியை தக்க வைக்க போராட வேண்டும். .ஆனால், ஒரு முறை தோற்றுப் போனால் வாழ்வில் லட்சம் முறை அந்த வெற்றியைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருப்போம் இதுதான் இயல்பு.

ஆகவே இங்கு யாருமே தோற்பதற்காக பிறந்த மனிதர்கள் கிடையாது .
உங்களுக்கான ஒவ்வொரு நிமிடத்தையும் தவற விடாதீர்கள். அப்படி நாம் தவற விடுகிற அந்த ஒவ்வொரு நிமிடம் கூட மீண்டும் நமக்கு  கிடைக்காது என்றார்.

No comments