நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றுகிறது
திமுக வேட்பாளர்கள் 8 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுப்பு
நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் பேரூராட்சியில் ஒரு சுயேச்சை மற்றும் 8 திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தவர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சிக்கு அறிவிக்கப்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய 9 வார்டுகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தவர்கள் மனுக்களை வாபஸ் பெறப்பட்டதால், 3வது வார்டில் எம்.பிரியா, 6வது வார்டில் ஜெ.பரமேஸ்வரி, 7வது வார்டில் என்.தேவிகா, 8வது வார்டில் கே.நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர்.கஸ்தூரி, 12வது வார்டில் டி.கலைமணி, 14வது வார்டில் ப.நாகராஜ் 15வது வார்டில் ஆர்.சபரீஸ்வரன் என 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் (9வது வார்டு) சுயேச்சை வேட்பாளர் ஆர்.ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெருபான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
No comments