பொள்ளாச்சியில் கரோனா தொற்றுக்கு 2 பேர் பலி
பொள்ளாச்சியில் கரோனா தொற்றுக்கு 2 பேர் பலி
பொள்ளாச்சி, மே.11
பொள்ளாச்சியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொள்ளாச்சி கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. பொள்ளாச்சி கரோனா கட்டுப்பாட்டுவதிமுறைகளை அதிகமானோர் மீறிவருகின்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமாலும் பெரும்பாலானோர் இருந்துவருகின்றனர்.
இதனால், கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி கிருஷ்ணசாமி லே-அவுட்டை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், தெப்பக்குளம் வீதியை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் கரோனா தொற்று ஏற்பட்டு சிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

No comments