Breaking News

பொள்ளாச்சியில் 16 பேருக்கு கரோனா

பொள்ளாச்சியில் 16 பேருக்கு கரோனா

பொள்ளாச்சி, ஏப்.8

பொள்ளாச்சியில் புதிதாக வியாழக்கிழணை 16 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
பொள்ளாச்சியில் புதன்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 
 
இந்நிலையில், வியாழக்கிழமை பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் 3 பேருக்கும், கோட்டூர் சாலை சிடிசி காலனி பகுதியில் ஒருவருக்கும், இமாம்கான்வீதியில் ஒருவருக்கும், மகாலிங்கபுரம் நல்லப்பா நகரில்  ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் 5 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 3 பேருக்கும், ஆனைமலையில் இருவருக்கும் என பொள்ளாச்சியில் மட்டும் 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
 
----

 

No comments