Breaking News

பொள்ளாச்சியில் புதிதாக 115 பேருக்கு கரோனா

பொள்ளாச்சியில் புதிதாக 115 பேருக்கு கரோனா


பொள்ளாச்சி, ஏப்.27
 பொள்ளாச்சியில் புதிதாக 115 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
பொள்ளாச்சியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் தினசரி கரோனா பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 
 
செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி நகரப்பகுதியில் 30 பேருக்கும், தெற்கு ஒன்றியப்பகுதியில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 16 பேருக்கும், ஆனைமலை பகுதியில் 28 பேருக்கும், கிணத்துக்கடவு பகுதியில் 13 பேருக்கும் என மொத்தம் 115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

---


 

No comments