Breaking News

கேரளாவில் இருந்துவரும் கோழிகள் முட்டைகளுக்கு தடை

 கேரளாவில் இருந்துவரும் கோழிகள்  முட்டைகளுக்கு தடை


பொள்ளாச்சி, ஜன.5


 கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவில் இருந்துவரும் கோழிகள், முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

 கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் இரண்டு மாவட்டங்களில் பரவிவருகிறது. இதனால், கேரளாவில் 40 ஆயிரம் கோழிகள், வாத்துக்களை அழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும், மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. கேரள மாநிலத்தின் அண்டை மாநிலமாக தமிழகம் இருப்பதால் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை முதல் தமிழக கேரள எல்லையான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புனி, ஜமீன்காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக கால்நடைத்துறை சார்பில் கேரளாவில் இருந்துவரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 

மேலும், கேரளாவில் இருந்துவரும் கோழிகள், முட்டைகள் ஏற்றிவரும் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் கால்நடைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். 

தமிழகத்தில் இருந்துதான் அதிக அளவில் கோழிகளும், முட்டைகளும் கேரளாவிற்கு செல்லும். இருந்தபோதும், கேரளாவில் எல்லையோரத்தில் உள்ள ஒரு சில பண்ணைகளில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள், முட்டைகள் தமிழகத்திற்கு எப்போதுதாவது வரும்.

No comments