Breaking News

தமிழக - கேரள வனத் துறையினர் இணைந்து ரோந்து பணி

 



துணை இயக்குனர் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி அவர்களின் உத்தரவின் பேரில் 6-12-20 மற்றும் 7-12-20 ஆகிய இரு நாட்களும் கேரள தமிழக வனத்துறை அதிகாரிகள் இரு மாநில எல்லைகளில் கூட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டனர். . இந்த இரு மாநில கூட்டு ரோந்து பணியில் தமிழகம் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி  வனச்சரக அலுவலர் திரு நவீன் குமார் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் திரு மணிகண்டன் ஆகிய இருவரும் வழி நடத்தினர். கேரள மாநிலம் சார்பாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கருமலை  வனச்சரக அலுவலர் திரு கண்ணன் மற்றும் ஒருகொம்பன்  வனச்சரக அலுவலர் திரு பாபு தலைமையில் கேரள வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.. இந்தக் கூட்டு ரோந்து பணிகளின்போது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் இடைப்பட்ட பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகள், மந்திரி மட்டம், சீட்டுக்கள் மலை, தவிட்டு கோழி மலை, மீன் பாறை , பத்தடி பாலம்,  கோழிகமுத்தி, வரகளியாறு ஏலக்காய் பாறை போன்ற  பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும் இரு மாநில வனதுறை அதிகாரிகளும் புலிகள் உட்பட வன விலங்குகளின் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு , வனத்தீ  மேலாண்மை ,அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல் , வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளான வேட்டையாடுதல்,  நில ஆக்கிரமிப்பு , மரம் வெட்டுதல்  போன்றவற்றை  தடுத்தல் குறித்த  தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
1.S. கண்ணன் FRO கருமலை வனச்சரகம்
2.M பாபு FRO, ஒருகொம்பன் வனச்சரகம்
3.A.மணிகண்டன் FRO மானாம்பள்ளி வனச்சரகம்
4.N நவீன்குமார் FRO உலாந்தி வனச்சரகம்.

No comments