பொள்ளாச்சி பாலியல் பாதிக்கப்பட்ட பெண் பெயர் வெளியீடு: திமுக மாவட்ட பொறுப்பாளர், தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு
பொள்ளாச்சி பாலியல் பாதிக்கப்பட்ட பெண் பெயர் வெளியீடு: திமுக மாவட்ட பொறுப்பாளர், தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு
பொள்ளாச்சி 14/01/2021.,
கடந்த 06/01/2021 தேதியன்று தனியார் தொலைக்காட்சியில் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை பற்றி விவாத மேடை நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தெற்கு திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தென்றல் செல்வராஜ் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவரது சகோதரரின் பெயரை வெளியிட்டுள்ளார்.
பாலியல் குற்ற வழக்கு சம்மந்தமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது உறவினர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் தென்றல் செல்வராஜ் விவாத மேடையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தெரிவித்ததால் தென்றல் செல்வராஜ் மீதும், அதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட சரவணன் மற்றும் அந்நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதற்காக தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும்,
மேலும் மேற்படி வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் ஆகியோர்கள் மீது கோட்டூரைச் சேர்ந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.


No comments