Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழா


ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கலை விழாவின் எட்டாம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நரசிம்மதாரணி அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார். 

பொள்ளாச்சி நவரஸ நாட்டியாலயா மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியை குரு கீதா ப்ரகாஷ் நெறிப்படுத்தி நடத்தினார். 

நாட்டியக் குழுவினரை அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் வரவேற்றார். இந்நிகழ்வில் அறங்காவலர் மஞ்சுளாதேவி, மருதமுத்து, ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பியின் செயலர் பாலு, திருக்கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments