சாலையோரத்தில் இருந்த பத்து மரங்கள் மறு நடவு
விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து பசுமை குழு மரங்கள் மறு நடவு சிறப்பு நிபுணர் கிரீன் கேர் சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் மாசிலாமணி இணைந்து புங்க மரம், வேப்ப மரம், ஆயமரம் போன்ற பத்து மரங்களை கிரேன் மற்றும் ஜேசிபி எந்திரம் மூலம் மறு நடவு செய்யப்பட்டது. இதனால், மரங்களை வெட்டாமல் அப்படியே வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யப்பட்டதை அறிந்த பகுதி மக்கள் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
No comments