Breaking News

கேரளா மீன் கழிவுநீரை தமிழகத்தில் கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு





கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் இறைச்சி கழிவுநீர் தமிழகத்தில்  பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலை கொட்டப்பட்டதை தடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான டிஎன்75 ஏஜெ1785 என்ற வாகனத்தில் கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரித்துவரும்  தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனத்திலிருந்து  மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் கழிவு நீர் கொட்டிய வாகனத்தை சிறை பிடித்து  கோமங்கலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். 

No comments