Breaking News

மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு 
சேக்கல் முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35) எஸ்டேட் கூலித்தொழலாளி. புதன்கிழமை காலை கூலித்தொழிலாளி முத்துக்குமார் தனது மகன் முகிலனை(4) பள்ளிக்கு நடைபாதையாக கூட்டிச் சென்றுள்ளார். 
அப்போது, வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் சிறுவன் முகிலன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  காயமடைந்த தந்தை முத்துக்குமார் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சாலக்குடி செல்லும் வழி மூடல்...
வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழி மழைப்பொழிவு அதிகமாக ஏற்பட்டதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வால்பாறை இருந்து சாலக்குடி செல்லும் வழி மூடப்பட்டது. வால்பாறை அடுத்த அதிரப்பள்ளி அருவி செல்லும் வழியில் மழுக்குபாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

No comments