Breaking News

அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
 வால்பாறையில் கிராமீன் கூட்டா லிமிடெட் நிறுவனம் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பாட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சியின் மூலம் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 கல்வியில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதோடு மாணவர்களின் கல்வியை மேலும் மேம்படுத்த உதவுவதை  நோக்கமாகக் கொண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி வழங்கினார். 

இந்நிகழ்வில் கிராமீன் கூட்டா லிமிடெட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பாஸ்கரன், ஏரியா மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் ஈஸ்வரன்; மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments