Breaking News

ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மாசாணி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மாசாணி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம். 

இந்நிலையில், இன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.கோயில் கொடிமரத்திற்கு முன்பு தீபம் ஏற்றி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். 
அதேபோல் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள
அகத்தியர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அங்கும் பொதுமக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.



No comments