பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை
பொள்ளாச்சி, பிப்.19.,
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்டவரை குத்திக்கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகன் தண்டபாணி (61). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் . இதை அடுத்து தண்டபாணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை ராணியின் மகள் மலர்க்கொடி மற்றும் அவரது மருமகன் துரையன் (55) ஆகியோர் கண்டித்துள்ளன்ர்.
இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை தண்டபாணி ராணியுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராணியின் மகள் மலர்கொடியும் மருமகன் துரையனும் கண்டித்துள்ளனர்.
அப்போது, இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில்,தண்டபாணி மறைத்து வைத்திருந்த கத்தியால் துரையன் மற்றும் மலர்க்கொடியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைபலனின்றி துரையன் உயிரிழந்தார்.
மலர்க்கொடி சிகிச்சை பெற்றுவருகிறார். வடக்கிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments