பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டி தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்
பொள்ளாச்சி, ஜன.29
பொள்ளாச்சி தனிமாவட்டமாக மாற்றக்கோரி பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
கடந்த 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பொள்ளாச்சி கோவை மாவட்டத்தில் கோட்டமாக மாற்றப்பட்டது. அப்போதே சார் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வந்தது.
அதற்குப் பிறகு பல்வேறு அரசியல் காரணங்களால்
பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தின் கீழ்
வட்டமாக செயல்பட்டு வந்த திருப்பூர் தற்போது, மாவட்டமாக மாற்றப்பட்டு
வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 50 ஆண்டு கால கோரிக்கையாக
இருந்தும் பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சியைவிட சிறிய பகுதிகள் எல்லாம் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் காரணங்களுக்காக பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற கோரி தற்போது பொள்ளாச்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,
பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில் பொள்ளாச்சியை தனிமாவட்டமாக
மாற்றக்கோரி வெள்ளிக்கிழமை
தீர்மானம் நடைபெற்றது.
பொள்ளா ச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வெ ள்ளிக்கிழமை பொள்ளாச்சி தொழி ல்வர்த்தக சபை அலுவலகத்தில் நடை பெற்ற கூட்டத்திற்கு தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபா லகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் சபரி எஸ்.கண்ணன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொள்ளாச்சியை விட மக்கள்தொகை யில், பரப்பளவில் குறைவாக உள்ள பகுதிகள் மாவட்டங்களாக மாற்றப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பொ ள்ளாச்சியை
அரசு மாவட்டமாக மாற்றவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்த
கோரிக்கையை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சட்டப்பேரவை துணைத்தலைவர்
ஆகியோரிடத்தில் தொழில் வர்த்தக சபை சார்பில்
மனு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
---

No comments