பொள்ளாச்சி. நவ.23. வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்திய 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பேத்கர் உருவம் படங்களுடன் பெரியார் கைத்தடி ஊர்வலம்.
இன்று காலை 11 மணியளவில்
பொள்ளாச்சி பி.எஸ்.என். அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்றது.
நிகழ்விற்கு,
தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்
காசு.நாகராசன் தலைமை வகித்தார்.
முன்னிலையாக,
திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் இரா.மோகன்,
திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் தி.பரமசிவம்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொறுப்பாளர் பாரதி,
திராவிடத் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்
ஆதித்தமிழன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர்
கம்பர்,
ஆதித்தமிழர் பேரவையின் வானுகன்,
தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் சிகான்,
உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
" ஆர்ப்பாட்டத்தில்,
வேல் வேண்டாம்
வேலை வேண்டும்
என்கிற முழக்கத்தோடு ஊர்வலமாக செல்ல முயன்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments