பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு தேசிய கொடிகள் வழங்கல்
பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு தேசிய கொடிகள் வழங்கல்
ஒன்னிபாளையம் அரசு பள்ளியில் பாஜக ஸ்டார்ட்-அப் செல் சார்பில் மாணவர்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடிகள் ஏற்றுவதற்காக வடக்கு மாவட்ட பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் விஜயகுமார் முன்னிலை வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் ஏற்பாட்டில் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டது. இதில் பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments