Breaking News

கடன் பெற்றவர்கள் திருப்பித் தராததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட காண்ட்ராக்டர்

கடன்  பெற்றவர்கள் திருப்பித் தராததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட காண்ட்ராக்டர் 
பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர்  சக்திகுமார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில்
சக்தி குமார்க்கு சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி, 2,50,000 ரூபாயும், கருப்பம்பாளையத்தை சேர்ந்த சாதிக் பாஷா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும்,  மற்றும் ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன் 8,00,000 ரூபாயும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மூவரும் பணத்தை திருப்பி கேட்டால் தர மறுப்பதாகவும் தன்னை மிரட்டும் வகையில் பேசுவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். 
என் சாவுக்கு இவர்கள்தான் காரணம் எனவும் வீடியோவில் தெரிவித்துள்ளார் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 இது குறித்த தகவல் அறிந்து  கோட்டூர் காவல் நிலைய போலீசார் சக்தி குமாரை உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments